தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பந்தலூர் புஞ்சக்கொல்லி பகுதியில் வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலை மறியல்

பந்தலூர் : பந்தலூர் அருகே புஞ்சக்கொல்லி பகுதியில் வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி புஞ்சக்கொல்லி காவயல் சாலைப்பகுதியில் பள்ளத்தாக்கான பகுதியில் 9 ஆதிவாசி குடியிருப்புகள் இருந்து வந்தது.

இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதால், வனவிலங்குகளால் ஆதிவாசி மக்கள் குடியிருக்க முடியாமலும் விவசாயம் செய்யமுடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

கோரிக்கையை ஏற்று வருவாய்துறையினர் ஆய்வு மேற்கொண்டு புஞ்சக்கொல்லி சாலையோரப்பகுதியில் 7 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு அந்த இடங்களில் தற்போது அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் ஆதிவாசி மக்கள் மரக்கிளைகள் மற்றும் செடி கொடிகளை வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டால் வனத்துறை அதற்கு தடை செய்வதாகவும் தங்களை மிரட்டி அச்சுறுத்தி வருவதாக கூறி நேற்று ஏழு குடும்பங்களை சேர்ந்த மக்கள் நேற்று புஞ்சக்கொல்லி சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிவாசி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் போராட்டத்தில் கலந்து கொண்டார். சம்பவ இடத்திற்குசேரம்பாடி வனச்சரகர் அய்யனார் மற்றும் போலீசார் வந்து ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன்பின் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News