தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனைக்குளம் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கால்நடைகள்

Advertisement

மண்டபம் : ராமநாதபுரம் அருகே பனைக்குளம் முதல் தேவிபட்டிணம் செல்லும் நெடுஞ்சாலையில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிவதால், வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.மண்டபம் ஒன்றிய பனைக்குளம் பகுதியில் இருந்து தேவிபட்டிணம் பகுதிக்கு செல்வதற்கு தமிழக நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையில் ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரிவாக நதிப்பாலம் பகுதியிலிருந்து குறுக்கு சாலையாக தேவிபட்டிணம் பகுதிக்கு செல்லலாம். இதனால் அதிகமான வாகனங்கள் பனைக்குளம், புதுவலசை தேர்வு போகி ஆகிய பகுதிகள் வழியாக தேவிபட்டிணம் செல்கின்றன.

இதனால் இந்த சாலையில் எந்த நேரமும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இந்நிலையில் இந்த சாலையில் அதிகமான கால்நடைகள் சுற்றி திரிகின்றன. மேலும் இந்த கால்நடைகளால் அதிகமான விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல கால்நடை உரிமையாளர்களை வரவழைத்து விழிப்புணர்வுகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News