தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தூரில் 19, 30வது வார்டில் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகம்

*எம்எல்ஏ பங்கேற்பு
Advertisement

சித்தூர் : ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கூட்டணி அரசு செய்த சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, சித்தூர் 19, 30வது வார்டில் உள்ள காஜூர், கொண்டமிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் தலைமை தாங்கி வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தலின் போது சூப்பர் சிக்ஸ் என்கிற வாக்குறுதியை வழங்கினார். தொடர்ந்து அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வருடத்திலேயே சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளான படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர், முதியோர் உதவித்தொகை ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.

கடந்த ஆட்சியில் அம்மா ஓடி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.13 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்களோ, அத்தனை பேருக்கும் ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த தாய்க்கு வணக்கம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார். அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் முழுவதும் பெண்களுக்கு அரசு பேருந்து இலவச பயணம் திட்டத்தை தொடங்க வைக்க உள்ளார்.

அதேபோல் கடந்த ஆட்சியில் மாநிலம் முழுவதும் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருந்தது. முதல்வர் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றவுடன் மாநில முழுவதும் அனைத்து சாலைகளை சீரமைத்தார். மாநில மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எம்எல்ஏ குரஜாலா ஜெகன் மோகன் ஏழைஎளிய மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார்.இதில் மாநகராட்சி மேயர் அமுதா, சூடா சேர்மன் கட்டாரி ஹேமலதா, தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் வசந்த் குமார், உள்பட ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News