தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் காவலை வரும் 29ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் காவலை ஜூலை 29ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி பாம்பன் பகுதியிலிருந்து 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.
Advertisement

இதற்கு, பாம்பன் பகுதி மீனவர்கள் இந்திய எல்லையில் கைது செய்ததாக குற்றசாட்டு வைத்தனர். இதனை அடுத்து மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 2ஆம் தேதி காலையில் கடலில் இறங்கி போராட்டம், சாலை மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் இன்று மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் 15 நாட்களுக்கு மீனவர்களின் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இத்தகைய இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு மீனவர்களையும், மீனவ கும்பங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, மீனவ அமைப்புகள் இன்னும் 1 மணி நேரத்திற்குள் இலங்கை அரசுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக மீனவ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News