தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பம்பையில் நாளை சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு: 3,500 பேர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு பம்பையில் நாளை நடைபெறுகிறது. இதில் 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றும், சபரிமலையில் ரூ. 1000 கோடிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநாட்டில் முடிவெடுக்கப்படும் என்றும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறினார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு பம்பையில் நாளை (20ம் தேதி) சர்வதேச ஐயப்ப பக்தர்கள் முதல் மாநாடு நடைபெறுகிறது.

Advertisement

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் நேற்று பம்பையில் நிருபர்களிடம் கூறியது: சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு 20ம் தேதி (நாளை) பம்பையில் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாஸ்டர் பிளான் உள்பட சபரிமலை வளர்ச்சிப் பணிகள் குறித்து 3 அமர்வுகளில் விவாதம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News