தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனை விதைகள் விதைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 20.7 லட்சம் பனை விதைகள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் விதைக்கப்படும் திட்டத்தை வரவேற்கிறேன். இந்த முயற்சி, வனத்துறை, உள்ளூர் மக்கள், மாணவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டுப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுவது சிறப்பிற்குரியது.

Advertisement

மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீரை மீட்டெடுக்கவும், சூழலியல் சமநிலையைப் பேணவும், பனை மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பனை மரம் தமிழரின் அடையாளம், இயற்கையின் காவலன். ஒருகாலத்தில் கிராமங்களின் பொருளாதாரமும் பசுமையும் பனைமரங்களோடு இணைந்திருந்தது. இன்று அதனை மீண்டும் உயிர்ப்பிக்கும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

இந்தத் திட்டம் வெற்றியடைய மக்கள் பங்கெடுப்பு மிக அவசியம். ஒவ்வொரு கிராமமும், பள்ளிகளும், இளைஞர் குழுக்களும் இணைந்து பனை விதை விதைப்பில் பங்கு கொள்ள வேண்டும். பனை விதைகள் விதைப்பது மட்டும் போதாது, அவற்றைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

இத்தகைய திட்டங்கள் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி மற்றும் பசுமை தமிழகம் உருவாக்கும் முயற்சிக்கு அடித்தளமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதே திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement