தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் அருகே வெண்ணாற்று கரையில் பனை நடும் பணி

*பொதுமக்கள் விதை நட்டனர்

Advertisement

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே வெண்ணாற்று கரையில் பனை நடும் பணி நடைபெற்றது. கிராமமக்கள், மாணவர்கள் விதை நட்டனர்.நீடாமங்கலம் அருகே நகர் ஊராட்சியில் நரசிங்கமங்கலம்,ப ன்னிமங்கலம் பகுதி வெண்ணாற்றங்கரை கரையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரண்டு பகுதிகளிலும் பனை விதைகளை கிராமமக்கள், மாணவர்கள் மற்றும் பல்நோக்கு சேவை இயக்கத்தினர் இணைந்து நட்டனர்.

நரசிங்கமங்கலம் பகுதியை சேர்ந்த நாட்டாமை ராமசாமி, பூபாலன், சிதம்பரம், சோமசுந்தரம், சீனிவாசன், ஆசை ஆசைத்தம்பி பல்நோக்கு சேவை இயக்க துணை தலைவர் ராஜேந்திரன் துணை செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், பனை மரங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கின்றது, மேலும் நுங்கு, பதனீர், பனங்கிழங்கு உள்ளிட்ட உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை தரும் பனை மரத்தை காப்பது நமது கடமை என்றும் தமிழ்நாடு அரசு வருடம் தோறும் லட்சக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தும், பனை மரங்களை இனி வெட்ட முடியாத அளவில் சட்டம் இயற்றியும் அவற்றை காத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

நிகழ்வில் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க உறுப்பினர்கள், கிராமவாசிகள் இணைந்து நரசிங்கமங்கலம் பைபாஸ் சாலை பாலம் வரை இரண்டு கிலோ மீட்டர் அளவிற்கு சாலையின் இரண்டு பகுதிகளிலும் பனை விதைகளை நட்டனர். நிகழ்வின் முன்னதாக ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். செயலாளார் ஜெகதீஷ் பாபு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisement

Related News