தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிவாசல் மேலாளரை தாக்கிய வழக்கு அதிமுக நகர செயலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை: 12 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு

Advertisement

நிலக்கோட்டை: பள்ளிவாசல் மேலாளரை தாக்கிய வழக்கில் அதிமுக நகர செயலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அதிமுக நகர செயலாளர் பீர்முகமது (47). இவர் தனது ஆதரவாளர்களான தமிம்அன்சாரி, சாகுல் அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி ஆகியோருடன் இணைந்து வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக் என்பவரை கடந்த 2012ல் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கில் மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் அதிமுக நகர செயலாளர் பீர் முகமதுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மற்ற 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement