தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1.35 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை பயன்பாட்டிற்கு வந்தது

*பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி
Advertisement

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1.35 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் வாரச்சந்தையில் காலையில் கோழிகள் விற்பனையும், மாலை நேரத்தில் காய்கனிகள் விற்பனையும் நடைபெற்று வருகின்றன.

அப்போது, பள்ளிகொண்டா பகுதி மக்கள் மட்டுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்யவும், காய்கனிகளை வாங்கி செல்லவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளிகொண்டா வாரச்சந்தைக்கு வந்து செல்கின்றனர்.

நாளுக்கு நாள் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் மேற்கூரை இல்லாமல் வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், மழை நேரத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்களும் வருகையும் குறைந்து விடும்.

இந்நிலையில், வாரச்சந்தை வளாகத்தினை மேம்படுத்த கடந்த 2023ம் ஆண்டு ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் தீட்டப்பட்டது. அதனை தொடர்ந்து வாரச்சந்தையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே தற்காலிகமாக வாரச்சந்தை பேரூராட்சி அருகிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ரூ.1.35 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தையை கடந்த மே 29ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனையடுத்து வாரச்சந்தை நேற்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை

பள்ளிகொண்டா வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை சர்வீஸ் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், சில கடைகள் சர்வீஸ் சாலையோரமே வைத்து வியாபாரம் செய்வதால் பள்ளிகொண்டா பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால், வாரச்சந்தைக்கு வரும் வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News