பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு பறவைகள் படையெடுப்பு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இவை வரத் தொடங்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான கழுகுகள் வந்துள்ளன என்று சென்னை மாவட்ட வன அலுவலர் சரவணன் கூறினார்.
கேரளாவில் இருந்து கழுகுகள் தமிழகத்திற்கு வருவது 1940களில் இருந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் கழுகுகள் இடம் பெயர்கின்றன. ஆனால், தென் கேரளாவில் உள்ள கழுகுகள் மழையிலும் அங்கேயே தங்கி விடுகின்றன. இந்த ஆண்டு மே மாதத்தின் 3வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவை தாக்கியது. உடனே அங்கிருந்து பறவைகள் புறப்பட்டன.
தற்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் திறந்தவெளிகளிலும் கழுகுகள் ஓய்வெடுப்பதைக் காணலாம். பருவமழை காலத்தில் கழுகுகள் அதிக அளவில் வருவதால், பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.