தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லாவரம் சாலையில் 4 அடி ஆழ திடீர் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பல்லாவரம்: பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் திடீரென ஏற்பட்ட 4 அடி ஆழ பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால், பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் திடீரென நேற்று பள்ளம் ஏற்பட்டது. 4 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளத்தால், அவ்வழி யாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் எந்த நேரத்திலும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவடைந்தது. அதன்பிறகு அந்த இடத்தை முறையாக மண் போட்டுமூடாமல், ஏதோ கடமைக்காக மூடி சென்றதன் விளைவாக பள்ளம் ஏற்பட்டுள்ளது என்றும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், எந்த நேரத்திலும் விபத்து ஏற்படலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி உயிர் காக்கும் வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற வாகனங்கள்கூட இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலையுள்ளது. இதை கருத்தில் கொண்டு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சரிசெய்து மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News