தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லாவரம் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 7 பேர் அடைப்பு

Advertisement

செங்கல்பட்டு: பல்லாவரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவர்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர். இதில் 5 பேரை காவலில் எடுத்து, காஞ்சிபுரம் எஸ்பி தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இச்சிறுமியின் பெற்றோர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விடுவார்கள். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தண்ணீர் கேன் போட வந்தவர், சிறுமியை காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு, தனது நண்பர்களான 7 சிறுவர்கள் மற்றும் 5 வாலிபர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சிறுமி, மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு மனநோயாளி போல் ஆகிவிட்டார். இதனால் சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தாயார் அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சிறுவர்கள் மற்றும் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த நந்தகுமார் (19), சஞ்சய் (19), எஸ்.சஞ்சய் (18), முடிச்சூரை சேர்ந்த சூர்யா (22), பல்லாவரத்தை சேர்ந்த நிக்சன் (22) உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்பட பல்வேறு குற்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 7 சிறுவர்களை அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சய், சூர்யா, நந்தகுமார், நிக்சன், எஸ்.சஞ்சய் ஆகிய 5 பேரையும் விசாரணைக்காக போலீசார் காவலில் எடுத்தனர். தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் வைத்து விசாரிக்காமல், காஞ்சிபுரம் ஐஜி மேற்பார்வையில், மாவட்ட எஸ்பி மற்றும் திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி தலைமையில் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் நேற்று மாலை போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே 5 பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டபோது, இன்ப சுற்றுலாவுக்கு செல்வது போல் ஜாலியாக சிரித்தபடி விசாரணைக்கு வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு நீதிமன்றம் பாரபட்சமின்றி மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News