தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலாற்று தரைப்பாலத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறிய லாரிகள் சிறைபிடிப்பு: கிராம மக்கள் போராட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அவளூர் சாலை மற்றும் பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக அங்கம்பாக்கம், ஆசூர், மாகரல், ஆர்ப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளுக்கு நாள்தோறும் 24 மணி நேரமும் 100க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் சென்று வருகின்றன. இவைகளில் எம்சாண்ட், ஜல்லி கற்கள் உள்பட பல்வேறு கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. இதனால் அவளூர் கிராம மக்கள் வாகன நெரிசலால் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து, பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக சென்று வரும் கனரக லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், இந்த நேர கட்டுப்பாட்டை மீறி கல்குவாரிகளுக்கு ஏராளமான கனரக லாரிகள் இரவுபகலாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக கல்குவாரிகளுக்கு சென்ற கனரக லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வாலாஜாபாத் காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரிடம் பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக காலை 7 முதல் 10 மணிவரை, மாலை 4 முதல் 6 மணிவரை கனரக லாரிகள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், இன்று அதிகாலை முதல் கனரக லாரிகள் சென்று வருவதால் வாகன நெரிசலில் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நேரக் கட்டுப்பாட்டை மீறிய லாரிகள் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News