தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேனர்கள் கிழிப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை மர்மநபர்கள் கிழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 19, 20, மற்றும் 21ம் தேதி ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார சுற்றுப்பயணம் மூலம் பிரசாரம் செய்கிறார்.

Advertisement

19ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலத்திலும், 20ம் தேதி நாமக்கல், பரமத்திவேலூரிலும், 21ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இதையொட்டி நாமக்கல்லில் அதிமுகவினர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி மோகன், சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரம் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளார்.

இதில் சேலம் ரோட்டில் உள்ள வரவேற்பு பேனர்களை நேற்று இரவு சிலர் கிழித்துள்ளனர். இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி மோதலில் பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டதா? அல்லது வேறு யாராவது கிழித்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement