தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழனி முருகன் கோயிலில் நாளை முதல் ரோப் கார் சேவை தொடக்கம்

 

Advertisement

பழனி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிதில் சென்று வர வசதியாக ரோப்கார், மின் இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதாலும், சுற்றுலா அனுபவமாக இருப்பதாலும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பலரும் ரோப் காரில் செல்லவே விரும்புகின்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. ரோப் பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வந்தன.

இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் ரோப்காரில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று பெட்டிகளில் தலா 250 கிலோ எடைக்கு கற்கள் வைத்து ரோப்கார் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதன் இயக்கத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்பு வல்லுனர் குழு ஆய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து ரோப்கார் சேவை நாளை முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement