தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு - திருச்சூர் சாலையில் துணிகரம் லாரியை வழிமறித்து எருமைகளை கொள்ளை அடித்த அண்ணன், தம்பி கைது

*மேலும் 13 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை
Advertisement

பாலக்காடு : பாலக்காடு -திருச்சூர் தேசிய சாலையில் லாரியை கத்தியை காட்டி வழிமறித்து, எருமை, காளை கன்றுகளை லாரியுடன் துணிகரமாக கொள்ளையடித்த கும்பலில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும், 13 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு 50 எருமை கன்றுகள், 27 காளை கன்றுகளுடன் லாரியில், டிரைவர் உட்பட 3 பேர் கோட்டயம் நோக்கி பாலக்காடு திருச்சூர் தேசிய சாலையில் சென்றனர். அப்போது வடக்கஞ்சேரி அருகே ரோயல் சந்திப்பு பகுதியில் 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் இவர்களது லாரியை தடுத்து நிறுத்தியது.

மேலும், கத்தியை காட்டி லாரியை கிழக்கஞ்சேரி பகுதிக்கு செலுத்துமாறு மிரட்டியது. இதையடுத்து, கிழக்கஞ்சேரியை அடுத்த வேங்கசேரியில் லாரியை நிறுத்தி லாரியில் இருந்து 50 எருமை கன்றுகளையும், 27 காளை கன்றுகளையும் இறக்கி லாரியையும் அபகரித்தனர். பின்னர், லாரி டிரைவர் உள்ளிட்ட 3 பேரை கொள்ளையர்கள் வந்த காரில் ஏற்றி வடக்கஞ்சேரி டவுன் பகுதியில் சுற்றியடித்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மூவரையும் இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.

இதுகுறித்து லாரி டிரைவர் உட்பட 3 பேரும் வடக்கஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்ட கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளை வழக்கில் வடக்கஞ்சேரியை அடுத்த கிழக்கஞ்சேரி சீரக்குழியை சேர்ந்த சகோதரர்கள் ஷமீர் (35), ஷஜீர் (31) ஆகியோரை வடக்கஞ்சேரி போலீசார் கைது செய்தனர். மேலும், வழிப்பறி கும்பலை சேர்ந்த மேலும் 13 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வழிப்பறி கும்பலால் கடத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட காளை கன்றுகளையும், எருமை கன்றுகளையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர், ஆந்திரா லாரி மூலமாக கோட்டயத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement