தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்டு அருகே ‘எனது கேரளம்’ அரசு பொருட்காட்சியில் குதிரை சவாரி, தீயணைப்பு விளக்கம்

பாலக்காடு : கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனின் நான்காவது ஆண்டு ஆட்சியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பாலக்காடு மாவட்ட தகவல் தொடர்புத்துறை மற்றும் அனைத்துத்தரப்பு அரசு துறைகள் சார்பில் பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்டு அருகே அமைந்துள்ள மைதானத்தில் எனது கேரளம் என்ற பெயரில் பொருட்காட்சி விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்காட்சியை பார்க்க திரளாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி செயல்பட்டு வருகிறது. வரும் 10 ம் தேதி வரை பொருட்காட்சி, விற்பனைக்கூடம் செயல்படும்.

நுழைவுக்கட்டணம் அனைவருக்கும் இலவசம். பொருட்காட்சி மேளாவில் குதிரை வண்டி சவாரியும் இடம் பிடித்துள்ளது. மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையில் குதிரை வண்டி சவாரி செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை 9 பேர் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராஜா என்ற பெயரிலுள்ள குதிரை வண்டி சவாரிக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த வண்டியில் பொது மக்கள் ஆர்வமுடன் சவாரி செய்தபடி உள்ளனர். குதிரை வண்டியில் இருந்தபடி போட்டோக எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில் இருந்து எவ்வாறு மக்களை மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் மூலம் பொது மக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வயநாடு மாவட்டம் முண்டக்கயம், சூரல் மலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றிய விதம் குறித்து புகைப்படங்கள் தீயணைப்புத்துறை அரங்கில் இடம் பெற்றுள்ளது.

Related News