தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாளை. சீனிவாசாநகர் ரவுண்டானாவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

*தூய்மை பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு

Advertisement

நெல்லை : நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா நேற்று பாளையங்கோட்டை மண்டலம் வார்டு 38 சீனிவாசாநகர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். தச்சநல்லூர் மண்டலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடடிக்கையாக சந்திமறித்தம்மன் கோயில் முன்பு சுகாதார பிரிவு சார்பில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

மழைக்கால பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி நேற்று மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில், பாளை மண்டலம் வார்டு 35 தெற்கு விநாயகர் கோவில் தெரு, தெற்கு உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு, தெற்கு பஜார், நெல்லை மண்டலம் வார்டு 15 ஜெபஸ்தியார் கோயில் தெரு, சாலியர் தெரு, கண்டியபேரி கால்வாய் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தச்சநல்லூர் மண்டலம் வார்டு 1 மதுரை பைபாஸ் ரோடு, வார்டு 3 மணிமூர்த்திஸ்வரம் வாழ வந்த அம்மன் கோயில் தெரு, வார்டு 12 ரெங்கநாதன் மாநகராட்சி பள்ளி, மேலப்பாளையம் மண்டலம் வார்டு 41 அன்புநகர், 42 எஸ்டிசி மெயின்ரோடு, வார்டு 43 வீரமாணிக்கபுரம் மேல தெரு பகுதிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநகராட்சி அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் கொண்டு, கழிவுநீரேடை தூர்வாருதல், பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு கணக்கிடுதல். மழைநீர் ஓடையில் தேங்கிய குப்பைகள் அகற்றி மழை நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement

Related News