தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய தாக்குதலில் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை மீண்டும் கட்டும் பாகிஸ்தான் அரசு: தீவிரவாதி வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவால் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டி வருவதை லஷ்கர் தீவிரவாதி காணொளி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த மே மாதம் 26 அப்பாவி மக்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைமையகமான முரிட்கே, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய முகாமான பஹவல்பூர் போன்றவை தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால், அந்த முகாம்கள் செயல்படவில்லை என பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது.

Advertisement

இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த பொய்யை அவர்களது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே காணொளி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த காசிம் என்ற தீவிரவாதி, இந்தியாவால் தகர்க்கப்பட்ட முரிட்கே முகாமின் இடிபாடுகள் முன்பு நின்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவின் தாக்குதலில் எங்கள் முகாம் அழிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், முன்பைவிட பெரியதாக மசூதியை மீண்டும் கட்டி வருகிறோம். பாகிஸ்தான் இளைஞர்கள் இங்கு தீவிரவாதப் பயிற்சிக்கு சேர வேண்டும்’ என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மற்றொரு காணொளியில் பேசிய அந்த அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, முகாமை மீண்டும் கட்டுவதற்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும்தான் நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேபோல, பஹவல்பூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அந்த அமைப்பின் தளபதி மசூத் இலியாஸ் காஷ்மீரி ஏற்கனவே ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்த கட்டுமானப் பணிகளுக்கு நிதி உதவி அளிப்பதும், வெள்ள நிவாரணம் என்ற பெயரில் தீவிரவாத அமைப்புகள் நிதி திரட்டுவதும் இந்திய உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News