பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடத்தை விதியை மீறிய இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம்
Advertisement
முன்னதாக அவர், பாகிஸ்தான் வீராங்கனை நிதா தரை போல்டாக்கியதும், ஆக்ரோஷமாக வெளியே போ என்பது போல் சைகை காட்டினார். இது வீராங்கனைகளின் நடத்தை விதியை மீறிய செயல் என்று கண்டித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியை விதித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்குள் அவரின் தகுதி இழப்பு எண்ணிக்கை 4-ஐ எட்டினால் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement