தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் பிரபல பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: அரியானா போலீஸ் அதிரடி

ஹிசார்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்து வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக வலுவான ஆதாரங்களுடன் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அரியானாவில் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா, கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷாகிர், ஹசன் அலி, நசீர் தில்லான் உள்ளிட்ட நபர்களுடன் ஜோதிக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் கிடைத்தன.

குறிப்பாக, டெல்லியின் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த எஹ்சான்-உர்-ரஹீம் என்கிற டேனிஷ் என்பவருடன் ஜோதி தொடர்பில் இருந்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறை, ஜோதியை தங்களுக்கு உளவு சொல்லும் கருவியாக மாற்றிப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் நடமாட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு டேனிஷ் கசியவிட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து, அவர் விரும்பத்தகாத நபராக அறிவிக்கப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். அதன்படி, மே 13ம் தேதி டேனிஷ் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தச் சூழலில், கடந்த மே 16ம் தேதி ஜோதி கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் ஹிசார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக ஹிசார் நீதிமன்றத்தில் 2,500 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு அவர் உளவு பார்த்ததற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஜோதியின் கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட எண்ணியல் தடயவியல் ஆய்வில், அவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷுடன் நீண்ட உரையாடல்களை நடத்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.