தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: டிஆர்டிஓ அதிகாரி கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை சேர்ந்தவர் மகேந்திர பிரசாத். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரின் சந்தன் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகை மேலாளராக பொறுப்பு வகித்து வந்தார். ஜெய்சல்மாரின் பொக்ரானில் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பயிற்சி மற்றும் சோதனைகளை டிஆர்டிஓ நடத்துகிறது.

இதில் ஈடுபடும் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளனர். இந்நிலையில் மேலாளர் மகேந்திர பிரசாத், பொக்ரான் தளத்தில் செய்யப்படும் சோதனைகள், விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளவர்கள் பற்றிய முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மகேந்திர பிரசாத்தை ஜெய்சல்மார் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.