தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் -சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஆய்வு

புதுடெல்லி: பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது யாராவது தாக்கினால் இருநாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்படும். இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் அனைத்து களங்களிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. பாகிஸ்தான் -சவுதி அரேபியா இடையிலான ஒப்பந்தத்தால் நமது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரதன்மைக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்தியா ஆய்வு செய்யும்” என்றார்.

* தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் - காங்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆபரேஷன் சிந்தூர் திடீரென நிறுத்தப்பட்ட ஒரு மாதத்திற்கு பின், ஏப்ரல் 2025பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களுக்கு நேரடியாக வழிவகுத்த அதே நபரான பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் அசீம் முனீரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைத்தார்.

பிரதமர் மோடியின் சீன வருகைக்கு பின் சீன அதிபர் ஜீ ஜின்பிங், சீனாவின் ரகசிய ராணுவ வளாகத்தை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு திறந்து வைத்தார். இப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி இருந்த சவுதி அரேபியா, பாகிஸ்தானுடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நிச்சயமாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கவலைப்படுகிறது\” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News