தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முனீர் இந்தியாவுடன் போருக்கு ஏங்குகிறார்: இம்ரான்கானின் சகோதரி குற்றச்சாட்டு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், பல வழக்குகளில் தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இம்ரான்கானின் மரணம் குறித்து வதந்திகள் பரவின. இந்தநிலையில் இம்ரான்கான் சகோதரிகளில் ஒருவரான டாக்டர் உஸ்மா கான், அடியாலா சிறையில் அவரை 20 நிமிடம் சந்தித்தார். அதன்பிறகு கூறும்போது,’ எனது சகோதரர் சிறையில் இருப்பதற்கு ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர்தான் காரணம். பாகிஸ்தான் மக்களை அடக்க அவர்கள் விரும்புகிறார்கள். மக்களின் குரல் கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மக்கள் இம்ரான் கானுக்குப் பின்னால் நிற்கிறார்கள். எனவே அவரை தனிமைப்படுத்தினால் மக்கள் அவரை மறந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள்.

Advertisement

அசிம் முனீர் தீவிரவாத இஸ்லாமியர். இஸ்லாமிய பழமைவாதி. இந்தியாவுடன் போருக்கு ஏங்குவதற்கு இதுவே காரணம். அவரது இஸ்லாமிய தீவிரமயமாக்கலும் பழமைவாதமும் இஸ்லாத்தை நம்பாதவர்களுக்கு எதிராகப் போராட அவரை கட்டாயப்படுத்துகின்றன. இம்ரான்கான் ஆட்சியில் வரும்போதெல்லாம், அவர் எப்போதும் இந்தியாவுடன், ஏன் பாஜவுடன் கூட நட்பு கொள்ள முயற்சிப்பதை நீங்கள் காண்பீர்கள். தீவிரவாத இஸ்லாமியரான அசிம் முனீர் இருக்கும்போதெல்லாம், இந்தியாவுடன் போர் ஏற்படும், இந்தியா மட்டுமல்ல, இந்தியாவின் நட்பு நாடுகளும் கூட பாதிக்கப்படும் என்பதை நீங்கள் காண்பீர்கள். இம்ரான்கான் பாகிஸ்தானின் சொத்து. அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் முயற்சியை மேற்கு நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றார். இதற்கிடையே பீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனிர் வேண்டுமென்றே ஆப்கனை வம்புக்கு இழுப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News