தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவின் வீட்டின் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்தபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் இருந்ததாகத் கூறப்பட்டுள்ளது.

Advertisement

நள்ளிரவு சுமார் 1:45 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மர்ம நபர்கள் நசீம் ஷாவின் வீட்டின் பிரதான வாசலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக, வீட்டின் உள்ளே இருந்த நசீம் ஷாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறியும் முயற்சியில், அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

காவல்துறை அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

Advertisement

Related News