தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 10 நாட்கள் இந்தியா போர் பயிற்சி: உள்நாட்டு ஆயுதங்கள் போர்க்கள சூழலில் பரிசோதனை!

குஜராத்: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்தியா பிரமாண்டமான 10 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. எக்ஸ் திரிசூல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையில் முப்படைகளும் பங்கேற்று தங்களின் தயார் நிலையை உறுதிப்படுத்தி உள்ளது. வெவ்வேறு விதமான நிலப்பகுதிகளில் பலவகையான உத்திகளை பயன்படுத்தி போர் மேற்கொள்வது குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisement

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் செயல் திறனை போர்க்கள சூழலில் சோதிப்பதாகவும் இப்பயிற்சி இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஒத்திகை நடக்கும் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் 28,000 அடி உயரத்திற்கு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரமாண்ட போர் ஒத்திகையை இந்தியா நடத்துவது அண்மை காலங்களில் இதுவே முதன்முறை என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை என்றும் நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் விமானங்களை இயக்க பாகிஸ்தான் தற்காலிக தடை விதித்துள்ளது.

Advertisement