தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்

பெஷாவர்: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான்வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான வர்த்தக எல்லைகள் ஞாயிறன்று மூடப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் 23 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் மற்றும் அதன் தொடர்புடைய தீவிரவாதிகளை கொன்றதாகவும் தெரிவித்து இருந்தது.

Advertisement

சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நிதானத்தை கடைப்பிடிக்கும்படி ஆப்கானிஸ்தானை கேட்டுக்கொண்டன. இதனைதொடர்ந்து டுராண்ட் கோடு என்று அழைக்கப்படும் 2611 கி.மீ. நீளமுள்ள எல்லையில் புதிய துப்பாக்கி சண்டை எதுவும் நடக்கிவில்லை. ஆனால் இரண்டாவது நாளாக நேற்றும் இருதரப்பு வர்த்தகத்திற்கான எல்லையானது மூடப்பட்டது. எல்லை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. தென்மேற்கு சாமன் எல்லை மூடப்பட்டு இருந்தாலும், ஞாயிறு முதல் அங்கு சிக்கித் தவிக்கும் சுமார் 1500 ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்தே செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்தாக கூறப்படுகின்றது. டோர்காமில் உள்ள முக்கிய வடமேற்கு எல்லையை கடக்கும் பாதையும் அனைத்து வர்த்தகம் மற்றும் பயணத்திற்கான நேற்று மூடப்பட்டு இருந்தது.

Advertisement