தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி

அங்காரா: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 'பாகிஸ்தானிய தாலிபான் குழு' ஆப்கானில் இயங்கி வருவதாக குற்றம்சாட்டி, பாக். ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது

Advertisement

ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் சமீப காலமாக பயங்காவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்காவில்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தானின் தலீபான்கள் இதனை மறுத்து வருகின்றனர். இதற்கிடையே தெஹ்ரிக் தான் பாகிஸ்தான் பயங்கரவாத தளபதியை அழிப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது ஏவுகணை நாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதனை தொடர்ந்து கத்தாரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் கையெழுத்தானது. ஆனால் அதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து துருக்கில் நடைபெற்ற பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே 2ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

Advertisement