தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராணுவ தளபதி, வெளியுறவு அமைச்சரை தொடர்ந்து இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த பாக். பிரதமர்: பூதாகரமாகும் சிந்து நதிநீர் பங்கீடு விவகாரம்

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமரும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்குப் போர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர், இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகளைக் கொண்டு அழிப்போம் என எச்சரித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, சிந்து நதி மீதான இந்தியாவின் திட்டங்கள் வரலாறு மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் என்றும், ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் போரைத் தவிர வேறு வழியில்லை என்றும் மிரட்டினார்.

ராணுவத் தளபதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் மிரட்டல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் தற்போது இந்தியாவிற்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இசுலாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ‘எங்களது நீரைத் தடுப்பதாக எதிரி (இந்தியா) அச்சுறுத்தினால், அவர்களால் ஒரு சொட்டு நீரைக்கூட எங்களிடம் இருந்து பறிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மீறி அத்தகைய முயற்சியில் ஈடுபட்டால், வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும்’ என்று ஆவேசமாக கொக்கரித்தார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்திய வெளியுறவு துறை ஏற்கெனவே பதிலடி கொடுத்துள்ளது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும், நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என்றும் இந்தியா உறுதியாகத் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதக் குழுக்களுடன் ராணுவம் கைகோர்த்துச் செயல்படும் ஒரு நாட்டின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுத் திறன் குறித்து உலக அளவில் உள்ள சந்தேகங்களை இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்கள் வலுப்படுத்துவதாகவும், இதிலிருந்து சர்வதேச சமூகம் தனது முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் எனவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Related News