தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக். சிறையில் சந்திக்க அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் இம்ரானின் சகோதரி மனு தாக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் சிறையில் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை சந்திப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை இந்நிலையில் இம்ரானின் சகோதரி அலீமா கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

இதில், வாரத்திற்கு இரண்டு முறை இம்ரானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இம்ரான் கானை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்க தவறியதால் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இம்ரானை சந்திப்பதற்கு அனுமதிக்கும் உத்தரவுகள் இருந்தபோதிலும் சிறை நிர்வாகம் அதனை கடைப்பிடிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* 16 மணி நேர போராட்டம்

அடியாலா சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் சந்திப்பதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இம்ரானின் சகோதரி, கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சோஹைல் அப்ரிடி உ்ள்ளிட்டோர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இம்ரானை சந்திக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 16 மணி நேரம் இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது. அதன் பின்னரும் இம்ரானை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

Advertisement