தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரணியில் விபத்து தடுக்க சென்டர்மீடியனுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி விறுவிறுப்பு

Advertisement

ஆரணி: ஆரணியில் விபத்துக்களை தடுக்க சென்டர்மீடியனுக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ஆரணி நெடுஞ்சாலை துறை உட்கோட்ட பிரதான சாலையான ஆரணி டவுன், ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் தினசரி போக்குவரத்து அதிகரித்து வருகிறது. விபத்து தடுக்க சாலையின் நடுவே சென்டர்மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் விளம்பர போஸ்டர்கள், நோட்டீசுகள் உள்ளிட்டவை அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இரவில் ரிப்ளக்டர்கள் தெரியாததால் சென்டர்மீடியன் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகிறது.

எனவே சென்டர்மீனியனில் ஒட்டப்பட்ட நோட்டீசுகளை அகற்றி சுத்தம் செய்து கருப்பு, வெள்ளை நிற பெயிண்ட் பூசவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையேற்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் நாராயணன் உத்தரவின்பேரில் ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆரணி டவுன் காந்திசாலை, எஸ்எம் ரோடு, அண்ணாசிலை பகுதி, இரும்பேடு சாலை, சேத்துப்பட்டு சாலைகளில் உள்ள சென்டர்மீடியன்களில் கருப்பு, வெள்ளை அடிக்கும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

Advertisement