தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார் விவகாரத்தில் போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் மாணவி சமர்ப்பித்தது அம்பலம்

லக்னோ: நீட் விடைத்தாள் கிழிந்ததாக நீதிமன்றத்தில் ஒரு மாணவி வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணையில் அவர் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என தெரியவந்ததால் மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement

மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. அதில், சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நீட் தேர்வு எழுதிய மாணவி ஆயுஷி படேல், தன்னுடைய விடைத்தாள் கிழிந்து விட்டதால் தன்னுடைய மதிப்பெண் முறையாக அறிவிக்கப்படவில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மாணவி ஆயுஷி படேல் வழக்கும் தாக்கல் செய்தார். அதில், தனது நீட் விடைத்தாள் கிழிந்து விட்டது. அதனால், எனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை. என்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும் இதற்கான ஆவணங்களையும் மனுவுடன் அவர் இணைத்திருந்தார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மாணவியின் விடைத்தாள் தொடர்பான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், ‘மாணவியின் விடைத்தாள் எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளது. மாணவி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து மாணவி மீது தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் கூறிய நிலையில், மனுவை திரும்ப பெறுவதாக மாணவி தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்தார்.

Advertisement

Related News