தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை முக்கிய உறுப்பினர்களாகக் கொண்டு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு இயங்கி வருகிறது. உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் களத்தில் செல்வாக்கு செலுத்தும் இந்த அமைப்பானது, சமீபத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய புதிய நாடுகளை இணைத்துக்கொண்டு, 10 உறுப்பு நாடுகளாக விரிவடைந்துள்ளது.

இந்த கூட்டமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உலக அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதாகும். அந்த வகையில், தொடக்கம் முதலே சர்வதேச பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வன்மையாக எதிர்ப்பதிலும், பயங்கரவாதத்திற்கு எதிராக நிலைபாடு என்ற உறுதியான கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் இந்த நாடுகள் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு, பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டறிக்கையில், பயங்கரவாதத்தை எந்தக் காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்த 10 உறுப்பு நாடுகளும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக உறுதி அளித்தன. மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பது, உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, நவீன தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்டவற்றில் ஒன்றிணைந்து செயல்படவும் தீர்மானம் ஏற்றன. பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்ததன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களின் கொள்கையை பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் வலுவாக உறுதிப்படுத்தியுள்ளன.

Related News