தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பத்மநாபசுவாமி கோயில் 13 பவுன் தங்கம் மாயம் 6 கோயில் ஊழியர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை: கேரள உயர் நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வாசலில் தங்கமுலாம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் தங்கம் கோயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கணக்குகளை சரிபார்த்தபோது 13 பவுனுக்கு மேல் எடையுள்ள ஒரு தங்கக்கம்பி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பத்மநாபசுவாமி கோயில் மேலாளர் திருவனந்தபுரம் போர்ட் போலீசில் புகார் செய்தார். தங்கமுலாம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் காணாமல் போன தங்கக்கம்பி கோயில் வளாகத்திலுள்ள மணலில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Advertisement

இதில் போலீசிடம் சிக்கி விடுவோமோ என பயந்து திருடிய நபர் தான் அந்த தங்கக் கம்பியை மணலில் வீசியிருக்கலாம் என்று தெரியவந்தது. ஆனாலும் திருடிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சந்தேகப் பட்டியலில் இருந்த 6 ஊழியர்களிடம் பல கட்டங்களிலாக விசாரணை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர். இது தொடர்பாக அனுமதி கோரி போர்ட் போலீசார் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 6 ஊழியர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News