தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் கேட்பவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு பாஜ கோரிக்கை

சென்னை: தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுக்க நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் 60 வரை கமிஷன் கேட்டு மிரட்டுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் பல ஆண்டுகளாக நடந்து வரும் இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை பெற்று, இனி எதிர்காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குளறுபடிகளை ஆராய்ந்து ஒட்டுமொத்தமாக களைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்யப்படும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை மிரட்டுபவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement