தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி கொள்முதல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தரச்சான்று வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் சக்கரபாணி வேண்டுகோள்

சென்னை: நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திக் கொள்முதல் செய்திட அனுமதியும், செறிவூட்டப்பட்ட அரிசியை சோதனை செய்து, தரச் சான்று விரைந்து வழங்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த ‘விண்டெர்ஜி இந்தியா 2025’ கருத்தரங்கத்திற்காக வந்திருந்த ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோக திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்தார். அப்போது, ஈரப்பதத்தை 17%லிருந்து 22% ஆக அதிகரித்து நெல் கொள்முதல் செய்திடவும் செறிவூட்டப்பட்ட அரிசியை கலப்பதற்கான தரச்சான்றை விரைந்து வழங்க ஆவன செய்ய கேட்டுக் கொண்டதோடு கீழ்க்காணும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டுகோள் விடுத்தார்.

2016 முதல் 2021 வரை தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூ.973 கோடியை வழங்கல் 2010-11, 2013-14, 2014-15 ஆண்டுகளுக்கான அரிசிக்காக இறுதி செய்யப்பட்ட விலை முன்மொழிவினை ஏற்று அதற்கான தொகை வழங்குதல், நெல்லைக் காய வைக்கும் இயந்திரங்களை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க உதவி செய்ய வேண்டும் என்றார்.

மேலும், அக்டோபர் - டிசம்பர் 2025 மாதங்களுக்கான மானியத் தொகையில் ரூ.1745.66 கோடி வழங்க அனுமதி அளித்ததற்காக ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்ய பிரதா சாகு உள்பட பலர் இருந்தனர்.

Advertisement