தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயல்களில் வீச்சு நெல் நடவு தொடங்கியது

கூடலூர் : கூடலூர் சுற்றுவட்ட பகுதிகளான பாடந்துறை, செறுமுள்ளி, புத்தூர்வயல், குனில்வயல், புளியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் வயல்களில் நாற்றுகள் நடவுசெய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம்.

Advertisement

நாற்றங்கால்களில் நாற்றுக்கள் உருவாக்கி பின்னர் வயல்களில் நாற்றுக்களை நடவுசெய்யும் முறையும், வயல்களில் நெல் விதைகளை வீசி நடவு செய்யும் வீச்சுநடவு முறையும் இப்பகுதிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நாற்று நடவு பணிகள் ஓரளவு நிறைவுற்று வரும் நிலையில் தற்போது வீச்சுநடவு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. பாரம்பரிய நெல் வகைகளான மர நெல், கொடுவாய், சிந்தாமணி, இவற்றுடன் பாரதி போன்ற நெல் வகைகளும் பயிரிடப்படுகிறது.

சீரகசால், கெந்தகசால் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடப்படுவது தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், இவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்துவது அதிகம் என்பதால் இந்த வகை பயிரிடப்படுவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது நெல் விவசாயம் குறைந்துவரும் நிலையில் ஒரு சில குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் விவசாயத்தில் பெரிய அளவிலான வருமானம் கிடைப்பதில்லை என்று கூறும் விவசாயிகள் தங்களின் சொந்த தேவைகளுக்காகவே வயல்களில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.

Advertisement

Related News