தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெல்லை அருகே நெல் அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவர் பலி

*டிரைவர் படுகாயம்

பேட்டை : நெல்லை அருகே நெல் அறுவடை இயந்திரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் பலியானார். டிரைவர் படுகாயம் அடைந்தார். நெல்லை அருகே கோபாலசமுத்திரம் பிராஞ்சேரியை சேர்ந்தவர் பாபநாசம் மகன் சசிகுமார் (48).

இவர் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவராக கோபாலசமுத்திரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முருகேசன் (35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் முருகேசன் கோபாலசமுத்திரம் பகுதியில் உளுந்து அறுவடை பணியை முடித்துள்ளார்.

பின்னர் நரசிங்கநல்லூர் பகுதி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சன்னியாசி (75) என்பவர் தனது வயலில் உளுந்து அறுவடைக்காக முருகேசனை அழைத்துச்சென்றுள்ளார்.

நெல் அறுவடை இயந்திரமானது கோபாலசமுத்திரம் சாலை நரசிங்கநல்லூர் குளத்து மடை அருகே சென்றபோது வாகனத்தின் டயர் கட் ஆகி வயல்வெளியில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சன்னியாசி மற்றும் டிரைவர் முருகேஷ் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சன்னியாசியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த முருகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.