தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் படுகாயம்

நெல்லை: நெல்லை அருகே சாலையின் குறுக்கே மாடு பாய்ந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் 14 பயணிகள் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நெல்லை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டு வந்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து நெல்லை அருகில் உள்ள கொங்கராயக்குறிச்சி பகுதியில் வந்தபோது, திடீரென ஒரு மாடு குறுக்கே வந்துள்ளது. மாட்டை கண்டதும் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் வடிவேலு என்ற டிரைவர் திடீரென பிரேக்கை பிடித்துள்ளார், பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

Advertisement

பேருந்தில் இருந்த 20க்கும் மேலான பயணிகள் அந்த விபத்தில் சிக்கினார். பேருந்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிர்த்து கொண்டு இருந்தபோது அவர்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் பெருமாள்புரம் காவல் துறையினர் உடனடியாக வந்து மீட்டனர். இதில் 14 பயணிகளுக்கு சிறியளவிலான காயம் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து 14 பயணிகளும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்க அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement