தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒழுகூர்குப்பம் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

Advertisement

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

வாலாஜா : வாலாஜா அடுத்த ஒழுகூர குப்பம் கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி, 47ம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த மாதம் மஹாபாரத கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 18 நாட்கள் மஹாபாரத சொற்பொழிவு, இசை பாடல் மற்றும் கட்டைக்கூத்து ஆகியன நடந்து வந்தது.

விழாவில் நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி களி மண்ணால் மிக பிரமாண்டமாக துரியோதனன் உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. பீமன் வேடம் பூண்ட தெருக்கூத்து கலைஞர், துரியாதனன் தொடையை பிளக்கும் நிகழ்வை தத்ரூபமாக நடித்து காட்டினார். அப்போது, அங்கிருந்த பெண்கள் துரியோதனின் தொடை பகுதியில் குங்குமத்தை கொட்டி ஒப்பாரி வைத்து அழுதனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், மாலை தீமிதி திருவிழா நடந்தது. அப்போது, கோயில் பூஜாரி அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன் உருவச்சிலையை பல்லக்கில் வைத்து அக்னியில் இறங்கி நடந்து வந்தார். பின்னர், திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். முன்னதாக பானையின் மீது கத்தியை நிற்க வைத்து பிரார்த்தனை நடந்தது. விழாவில் இன்று தர்மர் பட்டாபிஷேகம் நடக்க உள்ளது.

Advertisement

Related News