தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் உரை திராவிட இயக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் துவக்கம்: திமுக பெருமிதம்

சென்னை: உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவது திராவிட இயக்க வரலாற்றில் மாபெரும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக அமைய உள்ளது என்று திமுக கூறியுள்ளது.

Advertisement

திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில்,‘1968ம் ஆண்டு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் அண்ணா; தற்போது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் திராவிட நாயகர். அய்யா-அண்ணா- முத்தமிழறிஞரின் வழியில் சமத்துவ-சமதர்ம தமிழ்நாட்டை உருக்குவோம்-திராவிட இயக்கத்தின் கொள்கைகளை உலகெங்கும் எடுத்துச் செல்லுவோம்,’என்று பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், திமுக தனது சமூக வலைத்தளம் பதிவில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் தமிழ்நாட்டின் முதல் முதல்வர் என்ற பெருமையை பெற உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்க வரலாற்றில் மாபெரும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக இந்நிகழ்வு அமைய உள்ளது. சுய மரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருப்பது, 1968ல் பேரறிஞர் அண்ணா யேல் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க உரையை நினைவூட்டுகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் விதைத்த சமூகநீதி விதைகள் இன்று முளைத்து பரந்து விரிந்த ஆழமரமாய் உயர்ந்து நிற்பதற்கான சான்றாகவே இந்த நிகழ்வு அமைய உள்ளது,’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News