தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேம்பாலம் கட்டும் பணியால் தூசு பறக்கும் விமான நிலையச் சாலை: திருமங்கலத்தில் வாகன ஓட்டிகள் அவதி

திருமங்கலம்: திருமங்கலத்தில் மேம்பாலப் பணியால் விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் காமராஜபுரத்தில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. திருமங்கலம்-மதுரை விமானநிலைய ரோட்டில் தேவர் சிலை அருகிலிருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மேம்பால பணியால் தேவர் சிலையிலிருந்து காமராஜபுரம், கற்பகம் நகர் வழியாக ஆலங்குளம் செல்லும் சாலையில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது.

Advertisement

பாலப்பணி காரணமாக சாலையில் இருந்த தார் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதனால் தேவர் சிலையிலிருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் தூசு கிளம்புகிறது.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காமராஜபுரம், கற்பகநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 24 மணி நேரமும் பறக்கும் தூசி புகைமண்டலத்தால் அலர்ஜி, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பாலப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், சாலையில் தூசு பறக்காமல் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News