தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடிபி மட்டும் போதாது டிஜிட்டல் பேமென்ட்டுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய விதி: ஆர்பிஐ அறிவிப்பு

புதுடெல்லி: டிஜிட்டல் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய விதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது மொபெல் வாலெட், யுபிஐ, நெட் பேங்கிங்க், டெபிட், கிரெடிட் கார்டு என பல்வேறு வகையில் பணப்பரிமாற்றங்களை செய்து வருகிறோம். இவை அனைத்துக்கும் ஒரு முறை கடவுச்சொல்(ஓடிபி) என்ற எண் பாதுகாப்பாக உள்ளது. இந்த ஓடிபி எண் மோசடிகளில் இருந்து நம் பணத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை வௌியிட்டுள்ளது. புதிய விதியின்படி, டிஜிட்டல் மூலம் நாம் செய்யும் அனைத்துவித பணப்பரிவர்த்தனைகளுக்கும் இரண்டு முறை சரிபார்ப்பு(Two Factor Authentication) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

Advertisement

அதாவது, வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை வைத்து மட்டும் பரிவர்த்தனை செய்ய முடியாது. அத்துடன், நாம் உருவாக்கிய பாஸ்வேர்ட், பின் நம்பர், டோக்கன் எண், கை விரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளில் ஏதேனும் ஒன்றையும் வைத்து பணப்பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்க உதவும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

Advertisement