தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விரைவில் அரசாணை வெளியிடப்படும் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கம்

*நெல்லையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
Advertisement

நெல்லை : வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றி நீக்கம் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என நெல்லையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் அலுவலகத்தில் வனத்துறையின் பணிகள் தொடர்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட வன அலுவலர்களுடன் அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுதான் சி குப்தா. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மாரிமுத்து, சூழலியல் மேம்பாட்டு அலுவலர் அன்பு, நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவட் ராமன், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாத், சமூக காடுகள் கோட்ட மாவட்ட வன அலுவலர் இளங்கோ, களக்காடு முண்டந்துறை துணை இயக்குனர் ராமேஸ்வரன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாஞ்சோலை தொடர்பான விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. மணிமுத்தாறு பகுதியில் பல்லுயிர் பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும். அதற்காக தான் வனத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்படுகிறது. சூழல் சுற்றுலா உள்ளிட்ட நெல்லை மாவட்டத்திற்கு வனத்துறையின் திட்டங்கள் கொண்டு வருவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். தென்காசி மாவட்டத்திற்கு தனி மாவட்ட வன அலுவலர் நியமனம் செய்வதற்கான கோப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

வனத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பது வனத்துறையின் கடமையாகும். அதன் அடிப்படையில் யானைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மாஞ்சோலை புலிகள் காப்பக பகுதியாக இருப்பதாலும், காப்புக் காடுகள் பட்டியலில் இருப்பதாலும் சூழல் சுற்றுலா அனுமதி வழங்குவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனக் குற்றங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சரை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப், மேயர் பொறுப்பு கே.ஆர்.ராஜு, கிறிஸ்தவ பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வ சூடாமணி, ஒன்றிய திமுக செயலாளர்கள் பாளை.

வடக்கு செயலாளர் வேலன்குளம் கண்ணன், மத்தி போர்வெல் கணேசன், களக்காடு செல்வ கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் தர்மன், மாநகர துணை செயலாளர் பிரபு பாண்டியன், மேலப்பாளையம் பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், கால்வாய் துரை பாண்டியன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

Advertisement

Related News