தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காமராஜ் நகர் திட்ட பகுதியில் நடைபெறும் புதிய குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு: ஆய்வுக்கு பின் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: காமராஜ் நகர் திட்டப்பகுதியில் நடைபெறும் புதிய குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை, துறைமுகம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டப் பகுதிகளான துறைமுகம் திட்டப் பகுதி (க்ளைவ் பேட்டரி), காமராஜ் நகர் திட்டப் பகுதிகளை மறுகட்டுமானம் செய்வதற்காக மற்றும் சென்னை, துறைமுகம், க்ளைவ் பேட்டரி அருகில் என்னாத்தி மேம்பாலத்தின் கீழ் 4.26 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: துறைமுகம் திட்ட பகுதி மற்றும் காமராஜ் நகர் திட்ட பகுதிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. காமராஜ் நகர் என்று சொல்லப்படும் இடத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 14 குடியிருப்புகளும் அகற்றப்பட்டு, மறு கட்டுமானம் செய்து புதிதாக கட்டப்பட இருக்கின்றன. அந்த பகுதியினுடைய கள ஆய்வையும் மேற்கொண்டோம். இந்த பணிகளை விரைவுப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றோம்.

இப்போது எந்த வீடும் 400 சதுர அடிக்கு குறைவாக கட்டப்படக்கூடாது என்ற உத்தரவின் அடிப்படையில், 400 சதுர அடிக்கு குறைவான வீடுகள் கட்டப்படவில்லை. இந்த 400 சதுர அடியில் ஒரு படுக்கையறை, ஒரு சமையலறை, ஒரு சிறிய பூஜை அறை, வாஷ்ரூம் ஆகியவை அடங்கும் என்றார்.

Related News