ஸ்ரீ வைகுண்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடிக்கு ஓபிஎஸ் அணி கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு
எனவே, உரிய மரியாதை தராத தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவதாக அறிவித்தார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஸ்ரீ வைகுண்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அவரை வரவேற்க சாலையோரத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். பழைய தாலுகா அலுவலகம் அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு குழுவின் ஸ்ரீ வைகுண்டம் ஒன்றிய செயலர் செந்தில்பெருமாள், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளர் பார்வதி தலைமையில் திடீரென எடப்பாடி ஒழிக என கோஷமிட்டு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். துரோக அரசியலால் வலுவான இயக்கத்தை வலுவிழக்க செய்ததை கண்டித்தும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ஆகியவற்றை கண்டித்தும் பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.