கலெக்டர் ஆபீசில் வேலை எனக்கூறி போலி நியமன ஆணை வழங்கிய ஓபிஎஸ் அணி நிர்வாகி கைது
இதற்காக தீபிகாவிற்கு அரசு வேலை வாங்கித்தர ரூ.2.50 லட்சமும், தேன்மொழிக்கு ரூ.2 லட்சமும் கேட்டுள்ளார். அவர் கூறுவதை உண்மை என்று நம்பிய சக்திவேல், அவரிடம் பணம் கொடுத்துள்ளார். 2023ம் ஜூலை 23ம்தேதி சக்திவேலுக்கு போன் செய்த மணிகண்டன், அரசு வேலையில் சேர்வதற்கான உத்தரவு நகலை, வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். அந்த உத்தரவை வைத்துக்கொண்டு பணியில் சேர, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சக்திவேல், தீபிகா, தேன்மொழியை அழைத்துச்சென்றபோது, அது போலியான அரசு ஆணை என்பது தெரியவந்தது.
இதனால் தன்னை ஏமாற்றிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக்திவேல் சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் சத்துணவு அமைப்பாளர், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிளார்க், வீட்டுவசதி வாரிய அலுவலக கிளார்க் வேலை என பல்வேறு நபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, தலைமை செயலர் அலுவலகம் வழங்கியது போல் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.