தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே சென்னையில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன்; யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை; வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு என வதந்தி பரப்புகின்றனர். மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன். வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசி வருகிறேன்.

எனக்கு அவப்பெயர் வர வேண்டும் என திட்டமிட்டு செய்கின்றனர்; இது வேதனையளிக்கிறது. யார் வதந்தி பரப்புவது என சொல்ல முடியாது; அவர்களே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற வதந்திகளுக்கு தெளிவான பதிலை கூறி விட்டேன்; உறுப்பினர்கள் யாரையும் சந்திக்கவில்லை. எனது நோக்கம் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.

Advertisement