தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.பி.உதயக்குமாருக்கு ஓபிஎஸ் அணி எச்சரிக்கை: அஞ்ச மாட்டேன் என பதிலடி

போடி: ஓபிஎஸ் அணி தேனி மாவட்டச் செயலாளரும், பெரியகுளம் முன்னாள் எம்பியுமானவர் சையதுகான். இவர் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டவர். இவர் நேற்று போடியில் உள்ள ஓபிஎஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் பற்றி உதயக்குமார் தினந்தோறும் பழித்து விமர்சித்து வருவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். எடப்பாடியின் அடியாள் தான் இந்த உதயக்குமார். உதயக்குமார் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் உரிமையும் கிடையாது.
Advertisement

விரைவில் கொடநாடு வழக்கில் சிறைக்கு செல்வார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியால் தான் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிமுக கட்சியையும் பிளவுபடுத்தியுள்ளார். ஓபிஎஸ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தற்போது வரை கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அனைவரையும் வெளியேற்றி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, உதயக்குமார் கூறி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் விளைவுகள் வேறாக இருக்கும். இவ்வாறு கூறினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் முன்னாள் அமைச்சர் உதயக்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தேனி சையதுகான் நான் அடியாளாக இருந்தேன் என வாய் கூசாமல் ஒரு பொய் சொல்லி இருக்கிறார்.

எதற்காக இப்படி சொன்னார் என தெரியவில்லை அல்லது யார் எழுதி கொடுத்ததையும் வாசித்தாரா என தெரியவில்லை. நான் யாருக்கும் அடியாள் இல்லை. அது மட்டுமின்றி மிரட்டும் தொனியில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சொல்லியிருக்கிறார். எந்த விளைவையும் சந்திப்பதற்கு இந்த உதயக்குமார் தயங்குவதும் இல்லை, பின் வாங்குவதும் இல்லை. அவரது இந்த உருட்டல் மிரட்டலுக்கு நான் அஞ்ச மாட்டேன்’’ என்றார்.

Advertisement

Related News