தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

``எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை’’ - ஓபிஎஸ் அணி நிர்வாகி வீடியோவால் பரபரப்பு

Advertisement

நெல்லை:நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் பிஜிலி தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என வீடியோ வெளியிட்டு சில நாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஓபிஎஸ் அணி நிர்வாகி ஒருவரும் அதுபோல் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்விவரம் வருமாறு: நெல்லை மாவட்டம் பேட்டை அருகே குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு (55). ஓபிஎஸ் அணியில் ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி, வங்கி ஊழியர். இந்நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவரை ராஜகுரு தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜகுருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ராஜகுரு, தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனுக்கு வீடியோ மூலம் இணையதளம் வாயிலாக புகார் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகாரில் அவர் கூறுகையில், ``எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தற்போது உள்ளது. எனது உயிருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 3 பேர் தான் காரணம்’’ என தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்தனர். சேரன்மகாதேவி டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையிலான போலீசார் ராஜகுரு உட்பட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.

Advertisement